அவசரக் காலத்திட்டம் இன்னும் சில நாட்களுக்கு நீடிப்பு - பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அவசரகாலச் சட்ட விதிகளின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான விசேட தீர்மானத்திற்கான விவாதத்தைத் தொடர்ந்து, 128 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நேற்று(09.06.2026) கூடிய நாடாளுமன்ற அமர்விலேயே முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீட்டிக்கும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக ஆளுங்கூட்டணி உட்படப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், ஆதரவாக மொத்தம் 135 வாக்குகள் கிடைத்தன.
பலப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு படையினரின் அதிகாரங்கள்
அதேவேளை, இந்தத் தீர்மானத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர். இதற்கமைய, இந்தத் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

நாட்டின் தற்போதைய தேசிய பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகச் சங்கிலியை எவ்விதத் தடையுமின்றித் சீராகப் பேணுவதற்காகவே இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு அவசியமாகின்றது என ஆளுந்தரப்பு நாடாளுமன்ற விவாதத்தின் போது சுட்டிக்காட்டியது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்கள் மேலும் தொடரும் என்பதுடன், நாட்டின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு நடைமுறைகளும் பலப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam