மின்சார கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், உலக சந்தை நிலவரங்களை கருத்திற்கொண்டே கட்டண மாற்றங்களை தீர்மானிக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (20) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில மணிநேரங்களில் வளைகுடா பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்
உலகச்சந்தையில் நிலக்கரி விலை
உலகச் சந்தையில் நிலக்கரி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

சாதாரண காலங்களில் மேற்கொள்ளப்படும் கொள்வனவுகளுக்கான விலைகளை விட தற்போது உலகச் சந்தையில் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற்கொண்டே எதிர்காலத் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"எமது பிரதான இலக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதாகும். அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் பின்பற்றி வருகிறோம்.
மின்சார கட்டண உயர்வு
ஒவ்வொரு மாதமும் மின்சார நுகர்வில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில மாதங்களில் மின்சார நுகர்வு அதிகமாக இருக்கும். எவ்வாறாயினும், எமது எதிர்பார்ப்பு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாகும். உலகச் சந்தையில் நிலக்கரி முதல் அனைத்தும் விலை அதிகரித்துள்ளன.

இவ்வாறானதொரு சூழலில் நாம் கோரும் டெண்டர்களில் சாதாரண காலங்களில் கிடைக்கும் விலைகள் கிடைப்பதில்லை.
எனவே, எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டே தீர்மானிக்க வேண்டியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு! பொருட்களை வாங்குபவர்களுக்கு பரிசு அறிவிப்பு