கோவிட் தொற்றால் முதியவர்கள் இருவர் மரணம்
வவுனியா - பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் வசித்து வந்த முதியவர் இருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமான குறித்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த முதியவர்கள் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த காப்பகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு தங்கியுள்ளோருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.