பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 1000 – 1 500 வரையிலான சிறுவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
காலி - நாகொட பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் நூற்றுக்கு 65 சதவீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை படிப்பு நிறுத்தம்
நாட்டில் உள்ள மொத்த பாடசாலை மாணவர்களில் 3 வீதமானவர்கள் அல்லது சுமார் 129,000 சிறுவர்கள் பாடசாலை படிப்பை நிறுத்தியுள்ளதாக அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எடைக் குறைவான குழந்தைகளின் வீதம் மேலும் அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளன.
இது 2022 ஆம் ஆண்டில் 19.5 வீதமாகவும் 2023 ஆம் ஆண்டில் 21 வீதமாகவும் காணப்படுவதாக சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள சுகாதார மற்றும் போஷாக்கு பணியகம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri