வாக்களிக்கும் முறை தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கைகள்
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் உத்தியோகத்தர்களால் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.
இச்செயலமர்வானது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (30.10.2024) யாழ். மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தியோகத்தர்கள்
இதன்போது, எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி மக்களுக்கு தெளிவூட்டல் செயற்பாடுகளில் ஈடுபடுபடவுள்ள, பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உதவி பிரதேச செயலாளர்கள், நிர்வாக கிராம அலுவலர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு தெளிவூட்டப்பட்டது.

மேலும், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ்ஜால் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 18 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam