மீண்டுமொரு தேர்தல் நடந்தால் எமக்கான மக்கள் ஆணை நிரூபணமாகும்: பசில் விளாசல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய்ப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன, இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மொட்டுக் கட்சியை வீழ்த்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தாங்கள் போட்ட தாளத்துக்கு ஆடவில்லை என்ற காரணத்துக்காகவே ராஜபக்சர்களைச் சில சர்வதேச நாடுகள் பகைத்தன.

விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல்
அவர்கள் போடும் தாளத்துக்கு ஆட ராஜபக்சர்கள் பொம்மைகள் அல்லர். இன்றும் ஒருசில சர்வதேச நாடுகள் மொட்டுக் கட்சியையும் ராஜபக்சர்களையும் அடியோடு வீழ்த்தும் நோக்கில் செயற்படுகின்றன.
குண்டுத் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடிக்கவில்லை
ஆனால், அவர்களின் நிகழ்ச்சி நிரல் ஒருபோதும் வெற்றியளிக்காது. மொட்டுக் கட்சியோ அல்லது ராஜபக்சர்களோ குண்டுத் தாக்குதல்களை நடத்தி ஆட்சியைப் பிடிக்கவில்லை.
பல இலட்சம் மக்களின் ஒருமித்த ஆணையுடன்தான் ஆட்சி அதிகாரத்துக்கு நாம் வந்தோம். அந்த ஆணையை நாம் இன்னமும் இழக்கவில்லை.
மீண்டுமொரு தேர்தல் நடந்தால் எமக்கான மக்கள் ஆணை நிரூபணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
