கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு - ஒருவர் மரணம் - மற்றொருவர் காயம்
கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
34 வயதுடைய மிலிந்த என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளராக செயற்பட்டுள்ளார்.
தற்போது இத்தாலியில் வசிக்கும் சமிந்த என்பவருக்கு நெருக்கமானவர் எனவும் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், இன்று அதிகாலை 3 மணியளவில் முல்லேரியா, தெல்கஹவத்தை பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
விகாரைக்கு அருகில் உள்ள நபரின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி வீட்டில் உள்ளவர்களை எழுப்பிவிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri