இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள சி.துரைநாயகம்
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இனியும் இடமளிக்கக்கூடாது எனவும் மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் (Durainayakam) தெரிவித்துள்ளார்.
குறிஞ்சாக்கேணியில் இன்று இடம்பெற்ற இழுவைப்படகு விபத்தில் பல மாணவர்கள் உட்பட பெற்றோரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கிண்ணியாவில் இன்று இடம்பெற்ற இழுவைப்படகு விபத்தில் பல கனவுகளுடன் பாடசாலைக்குச் சென்ற பல சிறார்கள் பரிதாபகரமாக காவு கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். இது மிகுந்த மன வேதனையைத் தருகின்றது.
இந்த இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது. எனினும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அரசாங்கம் இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
இன்னமும் இதுபோன்று பல பகுதிகளில் பாதுகாப்பற்ற இழுவைப்படகு மூலம் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதைப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்பவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இவர்களின் போக்குவரத்துக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கும் முகமாக பாலங்களை அமைக்கும் நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறக்கூடாது என்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam

புடவையில் கலக்கும் பிக்பாஸ் தாமரையா இது, பேன்ட்-ஷர்ட் போட்டு ஆளே மாறிவிட்டாரே- வைரல் வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022