பிரித்தானியா செல்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! அதிர்ச்சியில் பிரித்தானியர்கள்..
பெப்ரவரி 25 முதல் பிரித்தானியாவுக்கு பயணம் செய்யும் இரட்டை (Dual) குடியுரிமை கொண்ட பிரித்தானிய நபர்கள், கட்டாயமாக செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு இருந்தால் மட்டுமே பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அல்லது “Certificate of Entitlement” ஆவணத்தை காட்ட வேண்டியிருக்கும் என உள்துறை அமைச்சகம் (Home Office) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரட்டைக் குடியுரிமை
பிரித்தானிய குடியுரிமையும் மற்றொரு நாட்டின் குடியுரிமையும் என இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

புதிய எல்லைக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் நிலையில், குறுகிய காலம் பிரித்தானியா வருபவர்கள் £16 கட்டணத்தில் Electronic Travel Authorisation (ETA) பெற வேண்டியிருக்கும்.
ஆனால், இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு பிரித்தானியாவில் கடவுச்சீட்டு இல்லையெனில் விமானம், கப்பல் அல்லது தொடருந்தில் ஏற அனுமதி மறுக்கப்படலாம்.
முக்கிய அறிவிப்பு
ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பல பிரித்தானிய குடியுரிமையாளர்கள், இந்த மாற்றம் தங்களுக்கு முன் அறிவிப்பின்றி ஏற்பட்ட சிரமமாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, பிரெக்சிட்டுக்குப் பிறகு ஸ்பெயின் குடியுரிமை பெற்ற சிலர், பிரித்தானிய கடவுச்சீட்டை பயன்படுத்தினால் தங்களின் ஸ்பெயின் குடியுரிமை பாதிக்கப்படலாம் என கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், EU குடியுரிமை ஆதரவு அமைப்பான The 3 million குழு, £589 கட்டணத்திற்கு பதிலாக குறைந்த செலவில் ஒருமுறை அனுமதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளது.
உள்துறை அமைச்சகம், இது பயணத்தை “இலகுவாகவும் பாதுகாப்பாகவும்” மாற்றும் டிஜிட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என விளக்கம் அளித்துள்ளது.