நாட்டில் இடம்பெற்ற போதைப்பொருள் மீட்பு நடவடிக்கை (Photos)
நாட்டில் தற்போது போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து வருகின்றமையால் இது தொடர்பில் பொலிஸார் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை
திருகோணமலை-மனையாவெளி பகுதியில் இளைஞர் மத்தியில் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து 300 மில்லி கிரேம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்ட நிலையில் இன்று (20.11.2022) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது.
செய்தி: பதுர்தீன் சியானா
கசிப்பு உற்பத்தி
யாழ்ப்பாணம்-அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்செழு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஒருவரை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (20.11.2022) இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து 20 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா, 7 ஆயிரம் மில்லிலீட்டர், கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: கஜிந்தன்
கோப்பாய்
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனையில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குடும்பம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று (20.11.2022) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நீண்ட காலமாக கசிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகனும் மற்றும் அயல் வீட்டுக்காரனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 15 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்
கொட்டடி
யாழ்ப்பாணம் - கொட்டடியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்க ரகசிய தகவலை அடுத்து கொட்டடி பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சோதனையிட்டபோது 500 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கொட்டடிப்பகுதியைச் சேர்ந்தவர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு மாதகல் பகுதியிலிருந்து போதைப்பொருள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி: தீபன்