போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: ஒரே நாளில் 734 பேர் கைது
முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று(14.5.2026) நடத்தப்பட்ட விசேட சோதனைகளின்போது 734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு தழுவிய ரீதியில் ஒரே நாளில் 786 விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் போதைப்பொருட்களுடன் 734 பேர் சிக்கினர்.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து 277 கிராம் ஹெரோயின், 451 கிராம் ஐஸ், 2 கிராம் கொக்கெய்ன், 3 கிலோகிராம் 316 கிராம் கஞ்சா, 2 ஆயிரத்து 127 கஞ்சாச் செடிகள், 2 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 8 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 747 போதை மாத்திரைகள், 466 கிராம் மதனமோதகம் மற்றும் 89 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தத் தேசிய திட்டத்தின் ஊடாக நாட்டின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை முற்றாக முடக்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
[H8A82WT
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan