நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றிய சாரதி: குவியும் பாராட்டுக்கள்
பலாங்கொடையிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் நடக்கவிருந்த பெரும் விபத்தை பேருந்து சாரதி தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதன்போது பேருந்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பலாங்கொடை டிப்போவிற்குச் சொந்தமான பேருந்தின் சாரதியாக அஜித் குமார கடமையாற்றியதாகவும் அவரின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சக்கரங்களில் ஏற்பட்ட கோளாறு
இன்று காலை சுமார் 6.50 மணியளவில் பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கி பேருந்து புறப்பட்டுள்ளது.
இதன்போது சக்கரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தை பெரும் முயற்சியுடன் சாரதி தடுத்து நிறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri