இஸ்ரேல், ஈரான் போரில் காசாவை மறந்துவிட வேண்டாம்! ஐ.நா வலியுறுத்து
இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ள நிலையில் இஸ்ரேலியப் படைகளின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் காசாவிலும் தொடர்வதாக ஐக்கிய நாடுகளின் நிவாரண பணிகள் நிறுவனம்(UNRWA) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காசவை சர்வதேசம் மறந்துவிடக்கூடாது என்றும் குறித்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிவாரண பணிகள் நிறுவனம் தமது எக்ஸ் தள பதிவில் இந்த விடயத்தை வலியுறுத்தியள்ளது.
Airstrikes and shelling by Israeli Forces continue in #Gaza.
— UNRWA (@UNRWA) June 17, 2025
No sirens. No safety.
Let’s not forget Gaza.#CeasefireNow pic.twitter.com/z0Qe1zAMts
வான்வழித் தாக்குதல்
“காஸாவில் இஸ்ரேலியப் படைகளின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் தொடர்கின்றன. சைரன்கள் இல்லை. பாதுகாப்பு இல்லை. காசாவை மறந்துவிடக் கூடாது” என குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கருத்துக்கு பதில் வழங்கும் விதமாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பான IDF, தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில்” பணயக்கைதிகளை மறந்துவிடக்கூடாது” என குறிப்பிட்டுள்ளது.
https://t.co/xDzT05P5Eu pic.twitter.com/DoztoYnaFA
— Israel Defense Forces (@IDF) June 17, 2025

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
