கேவலமான அரசியல் கலாசாரத்தை தொடர வேண்டாம் : அருண் ஹேமச்சந்திரா காட்டம்
மக்களுக்கு நிவாரணம் வழங்கி அரசியல் செய்ய முடியும் என்ற கேவலமான அரசியல் கலாசாரத்தை தொடர்ந்தும் செய்ய வேண்டாம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, ஜமாளியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் வைத்து, இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்ட விரோத குடிவரவாளர்கள்
மேலும் கருத்து தெரிவிக்கையில், “ரோஹிங்கிய பிரஜைகளாகிய இவர்கள் சட்ட விரோத குடிவரவாளர்கள்.
எனினும் நாங்கள் மனிதாபிமான முறையில் இவர்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். அத்தோடு, இவர்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வருகின்றோம்.
இவர்களுடைய பிரச்சினை உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சனையாகும். இவற்றை அரசாங்கம் மிகச் சிறப்பாக அணுகி வருகின்றது என்பதை குற்றம் சுமத்துபவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்.
உணவு உடை சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கச்சிதமாக செய்து கொண்டு வருகின்றோம்.
துறைமுகத்தில் வைத்தே நடமாடும் சுகாதார முகாம் அமைத்து அவர்களுடைய உடல் நிலையில் கவனம் செலுத்தப்பட்டது.
சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு பிரிவினர், வெளிவிவகார அமைச்சு மற்றும் பல்வேறு தரப்பட்ட துறைகள் ஒன்றாக சேர்ந்து, அகதிகள் விடயத்தை கையாளுவதற்கு இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.
சுய அரசியல் இலாபம்
சட்டத்தின் பிரகாரம், தற்போது இடைத்தங்கல் முகாமில் மியன்மார் 103 பிரஜைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநேரத்தில், அகதிகளை வைத்து தமது சுய அரசியலாக இலாபத்துக்காக சில அரசியல்வாதிகள் இயங்கி வருவதையும் அவதானித்து வருகின்றோம்.
இவற்றை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பாரிய விடயத்தினை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் ஒரு சில குறைபாடுகள் எழலாம்.
நாட்டைப் பொறுத்தவரை இது ஒரு புதிய அனுபவம். எனினும் அரசாங்கம் இந்த விடயத்தை அனுகுவதற்கான திறமையினையும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றது
அரசியல்வாதிகள் உதவி செய்ய வேண்டுமாக இருந்தால் நீங்கள், அதனை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக செய்ய முடியும். அரசியல் செய்கின்ற சூழல் இதுவல்ல.
அகதிகள் நாளை அல்லது நாளை மறுதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அதன் பிறகு இவர்கள் விவகாரம் தொடர்பாக, அந்தத் திணைக்களத்தினால் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam
