இலங்கையின் பிரச்சினைக்கு ஐ.நா நீதியை பெற்றுத்தரும் என நம்ப வேண்டாம் - ஐ.நா முன்னாள் அதிகாரி
இலங்கையின் பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் அமையம் நீதியை பெற்றுத்தரும் என்று நம்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரச்சினையில் செயற்பட ஐக்கிய நாடுகள் அமையத்துக்கு தைரியம் இல்லை என்று முன்னாள் உதவி பொதுச்செயலாளரும், ஐக்கிய நாடுகள் குழுவின் முன்னாள் தலைவருமான சார்லஸ் பெட்ரி தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் பல்கலைக்கழகம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் உலகளாவிய தமிழ் மன்றம், மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதிக்கான மையம் ஆகியன ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அமைப்பு இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறமுடியாது. எனினும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தைரியம் இல்லை, எனவே இலங்கை பொதுமக்கள் ஐக்கிய நாடுகள் சபையை சார்ந்து இருக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
இலங்கை பொதுமக்கள் ஐக்கிய நாடுகளை சபையை நம்பியிருந்தால் அவர்கள் அதிருப்தி அடையக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போரின் போதும் அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குறித்து விரிவான மறு ஆய்வு செய்ய அப்போதைய ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழுவுக்கு பெட்ரி தலைமை தாங்கினார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பெட்ரி தலைமையிலான குழு கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
