வவுனியா புகையிரத நிலையம் அருகில் திடீரென தீப்பரம்பல்
வவுனியா- புகையிரத நிலையம் அருகில் இருந்த மரம் ஒன்றில் திடீரென தீப்பரம்பல் ஏற்பட்ட நிலையில் மாநகரசபை தீயணைப்பு பிரிவு விரைந்து செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று இரவு (23.07) 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீப்பரம்பல்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான விடுதிகள் மற்றும் புகையிரத நிலையப் பகுதி என்பன துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், வவுனியா புகையிரத நிலையம் அருகில் இருந்த மரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை அவதானித்தவர்கள் உடனடியாக வவுனியா மாநகரசபைக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் நீரினை விசிறி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 19 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
