வவுனியா புகையிரத நிலையம் அருகில் திடீரென தீப்பரவல்
வவுனியா- புகையிரத நிலையம் அருகில் இருந்த மரம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் மாநகரசபை தீயணைப்பு பிரிவு விரைந்து செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று இரவு (23.07) 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீப்பரவல்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான விடுதிகள் மற்றும் புகையிரத நிலையப் பகுதி என்பன துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், வவுனியா புகையிரத நிலையம் அருகில் இருந்த மரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை அவதானித்தவர்கள் உடனடியாக வவுனியா மாநகரசபைக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் நீரினை விசிறி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri