யாழில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டம்
யாழ். (Jaffna) மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது, இன்றையதினம் (30.04.2024) யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தில் தென்னை பயிர்ச் செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய வெண் ஈ தாக்கம் தொடர்பாக அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
விவசாயிகள் மத்தியில் ஏமாற்றம்
அதனையடுத்து, இதனை கட்டுப்படுத்துவதற்கு திணைக்களங்கள் கவனம் செலுத்தவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், விவசாய நவீனமயமாக்கல் திட்டம் யாழ்ப்பாணத்தில் விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளதாக விவசாய அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |