சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் முகமாக விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு
சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் முகமாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று நடைபெற்றது.
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிரின் நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி முதல்வர் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், நிந்தவூர், நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை, காரைதீவு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சந்திப்புகள்
இதன்போது உள்ளூராட்சி மன்றங்கள் சுகாதார சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து இவ்வாறான சந்திப்புகளை நடத்துகின்றனர்.
இதில் பொது சுகாதாரம், துப்புரவு மற்றும் நோய்த்தடுப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. சுகாதார மற்றும் சேவை வழங்களை மேம்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இவ்வாறு இணைந்து சந்திக்கும் போது சுகாதாரத்துறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்க உதவியாக இருக்கும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் குறிப்பிட்டார்.











பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
