எரிசக்தி பிரச்சினை குறித்து சீன சூரிய சக்தி உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
நாடு எதிர்கொண்டுள்ள எரிசக்தி பிரச்சினை குறித்து சீனாவின் சூரிய சக்தி உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
அமைச்சில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
மீளுருவாக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவது குறித்தும் இவ்வேலைத் திட்டங்களை வலுவூட்டுவதற்கான வழிவகைகளையும் பெலிசிடி நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர், கலந்துரையாடியுள்ளார்.

சர்வதேச எரிசக்தி மாநாடு
இதனால், நாட்டிற்கு கிடைக்கவுள்ள நன்மைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், ஏற்பாடு செய்யப்படவுள்ள சர்வதேச எரிசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறும் சீன நிறுவன அதிகாரிகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில், அமைச்சரின் ஆலோசகர் ஹெட்டியாராச்சி, இலங்கை தேசிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய பணிப்பாளர் முர்ஷிதீன், ஏற்பாட்டாளர்கள், களுத்துறை நகர சபை உறுப்பினர் ஹிஷாம் சுஹைல், சியாஸ் சதுர்டீன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam