சீன விமானம் விபத்துக்குள்ளாகிய பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
சீனா ஈஸ்டர்ன் ஜெட் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புக்குழுக்களால் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை.எனினும் விமானத்திலிருந்த 132 பேரில் எவரும் உயிர் பிழைத்ததற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நேற்று கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டி உதவும் எனவும் நம்பப்படுகின்றது.
கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டியின் வெளிப்புறம் சேதமடைந்து நிலையில், அதன் உள் பதிவுகள் நன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் தரவுகளை ஆய்வு செய்வதற்காக இது பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் கனமழையாகக் காணப்படுகின்றமையால் மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முயற்சி கடினமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் வாங்கி தந்த அஜித் குமார்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா Cineulagam
