கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் மீது குற்றஞ்சாட்டும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு

Kilinochchi Northern Province of Sri Lanka
By Uky(ஊகி) Jun 21, 2024 04:13 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in சமூகம்
Report
Courtesy: uky(ஊகி)

கிளிநொச்சி (Kilinochchi) கரைச்சி பிரதேச செயலகம் மீது மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தற்போதைய நிர்வாகத்தினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் அமைப்பானது கரைச்சி பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்டிருந்த போதும் அந்த அமைப்பினை கண்காணிக்க கரைச்சி பிரதேச செயலகம் தவறியுள்ளது.

ஜப்பானில் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான பக்டீரியா: இராஜாங்க அமைச்சர் விளக்கம்

ஜப்பானில் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான பக்டீரியா: இராஜாங்க அமைச்சர் விளக்கம்

தற்போதைய புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் கடந்த நிர்வாகத்தினரால் பொறுப்புக்கள் எவையும் ஒப்படைக்கப்படாதது தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகம் பாராமுகமாக இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கரைச்சி பிரதேச செயலகத்திற்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளான தங்களை அங்குள்ள அதிகாரிகள் ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை என மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் குறிப்பிட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

பலமுறை வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பழைய நிர்வாகத்தினரிடமிருந்து கணக்கறிக்கைகள் மற்றும் செயற்பாட்டறிக்கைகளை சொத்துக்கள் உள்ளிட்ட பொறுப்புக்களை பெற்றுத்தர கோரியிருந்த போதும் கரைச்சி பிரதேச செயலகத்தினர் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காதிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் தமிழ் பெண் சுமத்தும் குற்றச்சாட்டு!

பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் தமிழ் பெண் சுமத்தும் குற்றச்சாட்டு!

பழைய நிர்வாகம்

கடந்த ஏழு வருடங்களாக கரைச்சி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பழைய நிர்வாகத்தினரின் செயற்பாடுகள் வரவேற்கக் கூடிய முறையில் அமைந்திருக்கவில்லை.

disabled-people-accuses-karaichi-divisional-

புலம் பெயர்ந்து வாழும் பலரும் மாற்றுத்திறனாளிகளுக்கென வழங்கியிருந்த பெருந்தொகையான நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை. நிதியளிக்கப்பட்டு இருப்பதற்கான சான்றுகளை திரட்டியுள்ள போதும் அது பயன்படுத்தப்பட்ட முறையினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர்.

உரிய முறையில் செயற்பாட்டறிக்கைகள் பேணப்படவில்லை.அத்தோடு கணக்கறிக்கைகள் பேணப்படவில்லை. புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும் போது புதிய நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட வேண்டிய கணக்கறிக்கைகள், செயற்பாட்டறிக்கைகள் என எவையும் தம்மிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை.

பழைய நிர்வாகத்தின் செயலாளர் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வந்ததோடு பொறுப்பு வாய்ந்த நிர்வாக முறையினை பேணியிருக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் புதிய செயலாளருடன் மேற்கொண்ட உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இலங்கை- பாகிஸ்தான் உறவில் மீண்டும் ஆரம்பமான கண் விழி வெண்படல தானம்

இலங்கை- பாகிஸ்தான் உறவில் மீண்டும் ஆரம்பமான கண் விழி வெண்படல தானம்

புதிய நிர்வாகத் தெரிவு

இந்த நிலையில் கரைச்சி பிரதேச செயலகம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பழைய நிர்வாகத்தினரின் செயற்பாடுகளை கண்காணித்து அவற்றை நெறிப்படுத்த தவறியிருக்கின்றது.

புதிய நிர்வாகத் தெரிவுக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தினை அடுத்தே இந்த புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

disabled-people-accuses-karaichi-divisional-

அப்படி புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும் போது பழைய நிர்வாகத்தினரின் செயற்பாடுகளை முடிவுறுத்தியிருக்க வேண்டும்.

பழைய நிர்வாகம் பொறுப்புடன் நடந்திருக்கும் சூழலில் புதிய நிர்வாகத் தெரிவு நடைபெறும் போது கணக்கறிக்கைகள் மற்றும் செயற்பாட்டறிக்கைகள் சொத்துக்கள் என்பனவற்றை அவற்றுக்கான உரிய ஆவணங்களுடன் புதிய நிர்வாகத்திடம் கையளித்திருக்க முடியும்.

எனினும், அவ்வாறு எத்தகைய ஒரு செயற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தினருடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

தந்தை ஒருவரின் கொடூர செயல்! சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட காணொளி

தந்தை ஒருவரின் கொடூர செயல்! சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட காணொளி

பொறுப்பற்ற கரைச்சி பிரதேச செயலகம்

ஒரு சமூக சேவை அமைப்பினரின் புதிய நிர்வாக தெரிவினைக் கூட கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் நெறிப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி எழுவதாக சமூக ஆர்வலர் சிலர் குறிப்பிடுகின்றனர்.

பெரும்தொகை நிதி உள்ளீர்க்கப்பட்டு உள்ளதோடு அந்த நிதி நன்கொடையாக சமூக சேவையினை நோக்காக கொண்டு வழங்கப்பட்டிருக்கின்றது.இந்த சூழலில் பிரதேச செயலகம் எப்படி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினை கட்டுப்படுத்தி நெறிப்படுத்த தவறியிருந்தது என்ற கேள்வி பல சந்தேகங்களை எழுப்புகின்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் மீது குற்றஞ்சாட்டும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு | Disabled People Accuses Karaichi Divisional

வெளிப்படைத் தன்மையோடு பழைய நிர்வாகம் இயங்கியிருக்குமானால் அதனை கரைச்சி பிரதேச செயலகம் கண்காணித்து கட்டுப்படுத்தி நெறிப்படுத்தியிருந்தால் புதிய நிர்வாகத் தெரிவின் போது மேற்படி கணக்கறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களையும் புதிய நிர்வாகத்திடம் கையளிப்பதில் தடங்கல் ஏற்பட்டிருக்காது.

இவ்வாறான சூழலில் கரைச்சி பிரதேச செயலகமும் இணைந்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் வலுவாக தோற்றம் பெறுவதை தடுக்க வேண்டும் ஏனெனில் கரைச்சி பிரதேச செயலகம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பழைய நிர்வாகத்தினரிடம் இருந்து பொறுப்புக்களையும் உரிய பதிவுகள் மற்றும் அறிக்கைகள் சொத்துக்களை புதிய நிர்வாகத்தினரிடம் பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என இது தொடர்பில் சமூக விடய ஆய்வாளருடன் மேற்கொண்ட கேட்டல்களின் போது அவர் மேற்கண்டவாறு தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறு செயபடுவதற்கு கரைச்சி பிரதேச செயலகத்திற்கு நடைமுறையில் உள்ள நிர்வாக சட்டங்களுக்கு ஏற்ப எத்தகைய தடைகளும் இருக்கப்போவதில்லை என்பதும் இங்கே நோக்கத்தக்கது.

இந்திய - இலங்கை கூட்டு அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்துவதில் கவனம்..!

இந்திய - இலங்கை கூட்டு அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்துவதில் கவனம்..!

பொது அமைப்புக்களின் நிர்வாகம் 

பொதுவாக ஒரு பொது அமைப்புக்கென சில கட்டுப்பாடுகளை நிர்வாகவியல் வகுத்துக் கொடுத்துள்ளது என்பது அனைவருக்கும் வெள்ளிடை மலையாகும்.

எனினும் ஊழல் மோசடிகள் தோன்றும் போது அவை நீறு பூத்த நெருப்பாகி விடுகின்றன என நிர்வாகவியலில் தேர்ச்சி மிக்க ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவருடன் பொது அமைப்புக்களின் கட்டமைப்பும் செயற்பாடும் என்ற தொனிப்பொருளில் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் மீது குற்றஞ்சாட்டும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு | Disabled People Accuses Karaichi Divisional

தலைவர், செயலாளர், பொருளாளர் என்றும் பின்னர் இவர்களுக்கான துணைநிலை பதவிகளுக்கு என்றும் தெரிவுகள் நடைபெறுவதோடு பிரிவுகள் சார்ந்து அல்லது பொதுவாக குறிப்பிட்டளவு உறுப்பினர்களையும் கொண்டதாக இருக்கும்.

நிதி வருவாய் மற்றும் வருமானமீட்டும் வழிமுறைகள் என அறிக்கைகள் பேணப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கென தனியான விதிமுறைகளினால் அவை ஒழுங்காக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் அல்லது உரிய கால இடைவெளிகளில் பொதுக்கூட்டம் அவசியமானது.அந்த கூட்டத்தில் கடந்த கணக்கறிக்கைகள், செயற்பாட்டறிக்கைகள் என்பன முன்வைக்கப்பட்டு சபையில் கூடிய மக்கள் முன் விளக்கமளிக்கப்படும்.

நிர்வாக கூட்டங்களும் அதில் கலந்தாலோசணைகளும் நடைபெறும்.

இப்படியான நடைமுறை பேணப்பட்டிருந்தால் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவின் போதும் உரிய ஆவணங்களை ஒப்படைத்து இருக்கலாம்.

கடந்த வருடம் ஆவணி மாதத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிர்வாகத்திற்கு தொடர்ந்து சிறப்பாக தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல பழைய நிர்வாகத்தின் தொடர்ச்சியை பேண அவர்களிடம் இருந்து அறிக்கைகளை பெற வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நியாயமானதே!

உலக சந்தையில் சீனி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் சீனி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நீர் விநியோக கட்டமைப்பு - விளக்கமளிக்கும் சபை

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நீர் விநியோக கட்டமைப்பு - விளக்கமளிக்கும் சபை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், நீர்கொழும்பு

27 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US