இந்த வருட ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்
டில்ஷான் மதுஷங்க காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றையதினம் (20.03.2024) டில்ஷான் மதுஷங்கவிற்கு மாற்று வீரராக தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குவெனா மபாகாவை அறிவித்ததையடுத்தே குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது, அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.
ரசிகர்கள் கவலை
கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் டில்ஷான் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணியால் 4.6 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

இந்நிலையில், உபாதை காரணமாக அவர் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளமை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 24ஆம் திகதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri