கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அதனை வரவேற்கும் வகையில் கொழும்பு உள்ளிட்ட பல புறநகர்ப் பகுதிகள் அலங்கார விளக்குகளால் வர்ணமயமாகியுள்ளன.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு, நீர்கொழும்பு, வென்னப்புவா, ஹலவத்தை உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய நகரங்கள் அழகிய ஒளி வடிவங்களாலும், கிறிஸ்துமஸ் அலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் திறந்து வைக்கும் நேரத்தை நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 25 மற்றும் 26
அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 09 மணி முதல் நள்ளிரவு வரையும், டிசம்பர் 27 ஆம் திகதி காலை 09 மணி முதல் இரவு 11 மணி வரையும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், , தாமரை கோபுரம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01 ஆகிய இரு தினங்களிலும் காலை 09 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 01 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 15 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
