கொழும்பை கோலாகலமாக அலங்கரித்துள்ள கிறிஸ்துமஸ் விளக்குகள்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அதனை வரவேற்கும் வகையில் கொழும்பு உள்ளிட்ட பல புறநகர்ப் பகுதிகள் அலங்கார விளக்குகளால் வர்ணமயமாகியுள்ளன.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பு, நீர்கொழும்பு, வென்னப்புவா, ஹலவத்தை உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய நகரங்கள் அழகிய ஒளி வடிவங்களாலும், கிறிஸ்துமஸ் அலங்காரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் திறந்து வைக்கும் நேரத்தை நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 25 மற்றும் 26
அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 09 மணி முதல் நள்ளிரவு வரையும், டிசம்பர் 27 ஆம் திகதி காலை 09 மணி முதல் இரவு 11 மணி வரையும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், , தாமரை கோபுரம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01 ஆகிய இரு தினங்களிலும் காலை 09 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 01 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri