நரேந்திர மோடிக்கு குவைத்தில் வழங்கப்பட்ட உயரிய விருது
அரசுமுறை பயணமாக குவைத்(Kuwait) சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய ஓடர் ஒப் முபாரக் அல் கபீர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது இதற்கு முன்பாக பில் கிளிண்டன், ஜோர்ஜ் புஷ் , சார்லஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ள நிலையில் அவருக்கு அந்நாட்டின் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
மேலும், குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
