வாழைச்சேனையில் இன்று பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் விபரம்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று திங்கட்கிழமை நாற்பத்தி மூன்று (43) பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதில் மூன்று பொலிஸார் எனவும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் கோவிட் தொற்றாளருடன் நெருங்கியவர்கள் என நாற்பத்தி மூன்று (43) பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும், நாற்பது (40) நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.
நாற்பத்தி மூன்று (43) பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ,ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை,வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கோவிட் தொற்றினால் முடக்கப்பட்ட நிலையில் காணப்படும் மருதநகர் கிராமத்தில் தனிப்படுத்தலில் இருந்தவர்கள் மற்றும் மேலெழுவாரியாக ஞாயிற்றுக்கிழமை முப்பது (30) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றதுடன், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்களுடன் நெருங்கியவர்கள் (30) பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளுமாக அறுபது (60) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எட்டு பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது என இன்று திங்கட்கிழமை முடிவு வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
