இலங்கையில் கோரத்தாண்டவமாடும் டெங்கு! - பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக பேராசிரியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் 9ஆம் திகதி வரை நாட்டில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். எனினும், இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 184 ஆகும் என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 10 வருட காலப்பகுதியில், பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டில், தற்போது வரையில் அதிக அவதானம் மிக்க 61 சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - ராகேஸ்
முதலாம் இணைப்பு
கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை - கொதடுவை பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இதனால் ஜூன் மாத இறுதிக்குள் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவில் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 வீத அதிகரிப்பு
நுளம்புகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற Breteau Index மதிப்பீட்டின் படி, 5% ஆக இருக்க வேண்டிய Breteau இன்டெக்ஸ் மதிப்பு, மாவட்டத்தின் சில பகுதிகளில் 25% ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்