வட மாகாண சபை முன்பாக டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போராட்டம்: முன்வைக்கப்பட்ட கோரிக்கை
SL Protest
Northern Province of Sri Lanka
Selvarajah Kajendren
By Theepan
வட மாகாண டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இப்போராட்டமானது வட மாகாண சபை முன்பாக இன்று(17.07.2023) இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தின் நோக்கம்
சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 2016 ஆண்டு முதல் வட மாகாணத்தில் 82 டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு 22 ஆயிரம் ரூபா வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிற போதிலும் அதில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இதற்கமைய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட மாகாண பிரதம செயலர் எஸ்.எம். சமன் பந்துலசேனவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US