முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் பிதிர்க்கடன் நிகழ்வு
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கான பிதிர்க்கடன் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் - சுழிபுரம் திருவடிநிலை தீர்த்தக்கடற்கரையில் இடம்பெற்றது.
மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரான முருகவேல் சதாசிவம் தலைமையில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களான திரு தவபாலசிங்கம், திரு சுபாஷ் மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த மக்கள், யுத்தத்தில் உறவுகளை இழந்தவர்கள் கலந்து கொண்டு பிதிர்கடன்களை தீர்த்துள்ளனர்.
இதில் சிவஸ்ரீ.S.நித்தியானந்த குருக்கள் , சிவஸ்ரீ.S.கந்தசாமி குருக்கள் ஆகியோர் தலமையில் பிதிர்க்கடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.