உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்: உயிரிழப்பு 38 ஆக உயர்வு
உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக் கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் காணாமல் போயுள்ள நால்வரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வான் தாக்குதல்
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கீவ் நகரை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் மேற்கொண்ட இந்த தாக்குதலே, நடப்பாண்டில் அப்பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாக பதிவாகியுள்ளது.
பீரங்கி குண்டுகள், மிதிவெடிகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளடங்கலாக பல்வேறு வெடி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் மீதே இந்த குண்டுவீச்சு நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலால் ஏற்பட்ட தீ பரவலை தீயணைப்புப் படையினர் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதிலும், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள அழிவுகளும் பாதிப்புகளும் மிக அதிகமாக காணப்படுவதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. கடந்த வாரம் முழுவதும் ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 2,000 ட்ரோன்கள், 1,600 வான்வழி குண்டுகள் மற்றும் 31 ஏவுகணைகளை ஏவி கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் இத்தகைய ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் உரிய பதிலடி நிச்சயம் வழங்கப்படும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு.. முடக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா சொத்துக்கள்