கடன் மறுசீரமைப்புக்கான முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ள இலங்கை
5.9 பில்லியன் டொலர் பொதுக் கடனை மறுசீரமைப்பதற்கான ஒரு முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.
இது, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இரண்டாவது தவணை நிதியான 334 மில்லியன் டொலர்களை நாடு பெறுவதற்கான முக்கிய நடவடிக்கையாகும் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.
நெருக்கடியைத் தீர்ப்பதற்கான கூட்டு முயற்சி
இது தொடர்பில் நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்றில், இலங்கையின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான கூட்டு முயற்சியின் அடையாளமாக, இந்தியா மற்றும் ஜப்பானின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ கடன் குழுவுடன் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் விதிமுறைகள் பொருளாதார மீட்சிக்கு முக்கியமானவை மட்டுமல்ல, வரி நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் இலங்கையி;ன் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
