நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு இன்று நள்ளிரவு வரை காலக்கெடு
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது.
இதுவரை சுமார் 20வீதமான அறிக்கைகள் மாத்திரமே மாவட்ட மட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, பெப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் அறிக்கைகள்
இந்தநிலையில், தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது அறிக்கைகள் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினால், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, நாளை இரவுடன் முடிவடையும், காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தேசிய தேர்தல் ஆணையகமும் வலியுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri