யாழில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்
யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று (28.01.2024) காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
சட்டவிரோதம்
எனினும், கடலின் சீற்றத்தினால் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் இவ்வாறு உயிரிழந்து கரையொதுங்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும். ஆமைகளை பிடிப்பதும் இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதமாகக் காணப்படுகின்றது
இதனால். கரையொதுங்கிய ஆமைகள் கைவிடப்பட்ட நிலையிலும் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
