தயாசிறி ஜயசேகர கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரது தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி கட்சியின் பதில் பொதுச் செயலாளராக பிரதி பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்(Video)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பல்வேறு முரண்பாட்டு நிலைமைகள் காணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடைபெற்ற கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் தயாசிறி ஜயசேகர பங்கேற்றிருக்கவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியில் தயாசிறி ஜயசேகரவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் தயாசிறி ஜயசேகர எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam
