பெண் பொலிஸ் அதிகாரியின் மகள் துஷ்பிரயோகம்-விசாரணைக்கு உத்தரவிட்ட பொலிஸ் மா அதிபர்

Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation Child Abuse
By Steephen Nov 21, 2022 11:35 AM GMT
Report

கந்தானை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் 12 வயதான மகளை, அந்த பெண் பொலிஸ் அதிகாரி தொடர்பு வைத்திருந்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம்  ஒன்று நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பான பொலிஸ் மா அதிபரின் சிறப்பு உத்தரவின் பேரில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் ஊடாக விரிவான விசாரணைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கணவன் சிறைக்கு சென்ற பின் வர்த்தகருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட பெண் பொலிஸ் அதிகாரி

பெண் பொலிஸ் அதிகாரியின் மகள் துஷ்பிரயோகம்-விசாரணைக்கு உத்தரவிட்ட பொலிஸ் மா அதிபர் | Daughter Of Female Police Officer Abused

கந்தானை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியாக பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கடமையாற்றி வருகிறார். அவரது கணவர் சிறைச்சாலை பொறுப்பதிகாரி என்பதுடன் ஹெரோயின் வர்த்தகம் சம்பந்தமான குற்றச்சாட்டில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணவர் சிறைக்கு சென்ற பின்னர், பெண் பொலிஸ் அதிகாரி, வர்த்தகர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இந்த வர்த்தகர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பெண் பொலிஸ் அதிகாரி ஜா-எலயில் வீடொன்றில வசித்து வந்துள்ளார்.

இந்த வீட்டில் வைத்தே பெண் பொலிஸ் அதிகாரியின் மகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் சிறுமியை சில காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ள நிலையில், பெண் பொலிஸ் அதிகாரி சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியையும் மற்றைய மகளையும் தும்மல்சூரியவில் உள்ள தனது தாயாரின் வீட்டில் தங்கவைத்துள்ளார்.

பொலிஸாரிடம் நடந்தவற்றை கூறிய சிறுமி

பெண் பொலிஸ் அதிகாரியின் மகள் துஷ்பிரயோகம்-விசாரணைக்கு உத்தரவிட்ட பொலிஸ் மா அதிபர் | Daughter Of Female Police Officer Abused

இதனிடையே பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக தும்மலசூரிய பொலிஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் வீட்டுக்கு சென்று சிறுமியை சந்தித்துள்ளனர். பொலிஸ் விடயங்களை விசாரித்த போது சிறுமி தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆரம்ப விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபருக்கு மாத்திரமல்லாது மகளுக்கு நேர்ந்த பாலியல் குற்றத்தை மறைக்க முயற்சித்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US