விசாரணைக்கு அழைக்கப்பட்ட கோட்டா!கைது தொடர்பில் வெளியான தகவல்
சுரேஸ் சலேவின் கைதினைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச தான் கைது செய்யப்படுவார் என பல தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சுரேஸ் சலேவை தடுத்து வைத்து 90 நாட்கள் விசாரணைகள் இடம்பெறுகின்றது.ஆதாரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு சுரேஸ் சலே கோட்டாபய ராஜபக்ச குறித்து தகவல்கள் வெளிப்படுத்துவாரானால் அடுத்ததாக கோட்டாபய தான் விசாரணைக்காக அழைக்கப்படுவார்.
ஆனால் குறித்த விடயம் தொடர்பாக எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது.
மேலும், சுரேஸ் சலே கோட்டாபய ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிட்டால் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு அவர் கைது செய்யப்படுவார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் பலர் வெளியில் பதற்றத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (17) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி....