பாரிஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த கொடூரம் - மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் குடும்ப முரண்பாடு காரணமாக தந்தை ஒருவரால் மகன் படுகொலை செய்தமை அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
பாரிஸின் புறநகர் பகுதியான செய்ன்-சன்-துனி மாவட்டத்திற்கு Villemomble பகுதியில் இந்த சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அங்குள்ள வீடு ஒன்றில் கெவின் என அழைக்கப்படும் ஏழு வயது சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சோபா இருக்கையில் சடலமாக கிடந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
தலையில் சுடப்பட்டு சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 34 வயதுடைய சிறுவனின் தாயார் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில், சிறுவனின் சடலத்தை கண்டு அதிர்ச்சியில் பொலிஸாரை அழைத்துள்ளார்.
விசாரணைகளை தொடர்ந்த அதிகாரிகள், வீட்டின் மற்றுமொரு அறையில் சிறுவனின் தந்தை தற்கொலைக்கு முயன்ற நிலையில் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டார். 36 வயதுடைய சிறுவனின் தந்தை தற்போது தீவிர சிகிச்ச்சைப் பிரிவில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.
குறித்த தந்தையே மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தந்தை இம்மாத ஆரம்பத்திலேயே சிறையில் இருந்து விடுதலையாகியிருந்தார்.
மனைவியுடனான குடும்ப தகராரின் முடிவிலேயே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக அறிய முடிகிறது. இந்த தம்பதி ஒரே வீட்டில் வாழ்ந்த போது தொடர்ந்து தகராரில் ஈடுபடுவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். மனைவியை வேதனைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் மகனை கொலை செய்துள்ளதாக அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மகனை கொலை செய்தால் நிச்சயமாக மனைவி வேதனைப்படுவார். அது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்த சம்பவத்தை அவர் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான காரியத்தை செய்தவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 21 மணி நேரம் முன்

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 3 நாள் பட்டய கிளப்பும் வசூல்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam

ஜேர்மனிக்கு பயணித்த கேரள இளம்பெண்ணை பாதி வழியில் திருப்பி அனுப்பிய விமான நிறுவனம்: காரணம் என்ன தெரியுமா? News Lankasri

சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி Cineulagam

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ News Lankasri

38 வயதில் விளாடிமிர் புடின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் இவ்வளவு சர்ச்சைக்கு பெயர் போனவரா? புதிய தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022