பாரிய விளைவுகளைச் சந்திப்பீர்: அரசாங்கத்திற்கு டலஸ் அணி எச்சரிக்கை!
தொழிற்சங்கத் தலைவர்களை அடக்கும் செயற்பாட்டை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை அரசு சந்திக்க வேண்டி வரும்" என்று சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (29.03.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, "தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிரான வேட்டையை அரசு உடன் நிறுத்த வேண்டும்.
தவறான முன்னுதாரணமாகும்
தேசிய வளத்தைக் காக்கப் போராடிய தொழிற்சங்கத் தலைவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை தவறான முன்னுதாரணமாகும்.
எனவே, தன்னிச்சையாகச் செயற்படுவதை அமைச்சர் கஞ்சன நிறுத்திக்கொள்ள வேண்டும்."
எனத் தெரிவித்துள்ளார்.