நாளை முதல் அதிகரிக்கப்படும் தேங்காய் விநியோகம்
லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, நாளை முதல் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
உற்பத்தி தடை
கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள சதொச கிளைகளில் வாடிக்கையாளர்கள் நாளை முதல் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும், 130 ரூபாவுக்கு ஒரு தேங்காயை கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தேங்காய் உற்பத்தி தடைபட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam