தமிழரசுக் கட்சியின் கோரிக்கையை பரிசீலிக்க தயார்! டக்ளஸ் சுட்டிக்காட்டு
புதிய இணைப்பு
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் நேரடியாகச் சென்று இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவைக் கோரியுள்ளது.
நேரடியாகவே சந்தித்து ஆதரவு கேட்ட தமிழரசுக் கட்சியின் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் யாழ். நகரில் உள்ள ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்துக்கு இன்று மாலை நேரில் சென்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி. ஆதரவை வழங்க வேண்டும் என்று அதன் செயலாளர் நாயகத்திடம் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் கோரியுள்ளார்.
இவ்வாறு தமிழரசுக் கட்சியே நேரில் வந்து எம்மைச் சந்தித்துக் கலந்துரையாடி ஆதரவை வழங்குமாறு விடுத்துள்ள கோரிக்கையை ஈ.பி.டி.பி. பரிசீலிப்பதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
செய்தி தீபன்
இரண்டாம் இணைப்பு
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குமிடையிலான கலந்துரையாடல் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஈ.பி.டி.பி - தமிழரசுக் கட்சி சந்திப்பு தொடர்பில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானமும் நேற்றுமுன்தினம் என்னுடன் தொலைபேசியில் தொடர்பாடினார்.
சந்திப்பு
இன்று மாலை அவர்களுடன் சந்தித்துப் பேசவுள்ளோம். மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் பிரகாஷ் என்னைச் சந்திப்பதற்குப் பல தடவைகள் முயற்சி செய்தார்.
இன்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தலைவரோடு கலந்துரையாட உள்ளமையால், சந்திப்பின் பின் இது பற்றி யோசிக்கலாம் என அவரிடம் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
