உணவு தேடி பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த முதலை (Photos)
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த முதலை ஒன்று திருகோணமலை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டு உப்பாறு பாலத்திற்கு கீழாக உள்ள ஆற்றுப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று குறித்த முதலை அடையாளங்காணப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஸ்தலத்துக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் குறித்த முதலையானது மீட்கப்பட்டு மீண்டும் நீர் நிலையொன்றில் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதலையானது அருகில் உள்ள ஏரியிலிருந்து உணவு தேடி பொலிஸ் நிலையத்திற்குள் வந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் மழை காரணமாக பரவலான காணிப்பகுதிகளில் நீர் தேங்கியிருப்பதால் அங்கு இவ்வாறான ஆபத்தான விலங்குகள் மறைந்திருக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்படுகின்றனர்.


அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 11 மணி நேரம் முன்
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam