ஜனாதிபதியின் செயல் வெறும் கண்துடைப்பு: எதிர்க்கட்சியின் விமர்சனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிஐடியிடம் ஒப்படைப்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சிஐடியிடம் ஒரு பொது ஆவணத்தை ஒப்படைப்பதால் எந்த நன்மையும் ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சட்டமா அதிபரிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து எதுவும் வெளிவரவில்லை.
முரண்பாடான கருத்துக்கள்
அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதை ஆயர் மாநாட்டிடம் ஒப்படைத்தார். எனவே ஜனாதிபதி திஸாநாயக்கவின் செயல் வெறும் கண்துடைப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதில் முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக ஒரு அமைச்சர் கூறியுள்ளார்.
இருப்பினும், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார். எனவே ஏன் இந்த முரண்பாடுகள் என்றும் காவிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri
