மே மாதம் 6ஆம் திகதியின் பின்னர் தமிழர் பகுதியில் காத்திருக்கும் ஆபத்து..
ஈழத்தமிழர்கள் தங்களை வெளிநாட்டு ரீதியாக பரிணமிக்க கூடிய சக்திகளை அடையானம் கண்டு அவர்களுடன் ஐக்கியத்தை உருவாக்க வேண்டும் என்று அரசறிவியலின் ஆசான் என்று அழைக்கப்படும் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நாடு தழுவியது, ஆனால் உள்ளூராட்சி தேர்தல் உள்ளூர் அதிகாரங்களை உள்ளூர் மக்களிடம் கொடுப்பது பற்றியது.
ஆனால் இதில் தமிழர்கள் தோல்வியடைந்து விட்டால் உள்ளூர் அதிகாரத்தில் தமிழர்களை வைத்திருக்க தயாரில்லை என்று அர்த்தம். தமிழ் அதிகாரத்தில் சிங்களவர்களை வைத்திருக்க போகின்றார்கள் என்றால் சுயாட்சியிலிருப்பவர்களின் கோரிக்கை இல்லாமல் போய்விடும்.
இந்த விடயங்களால் தான் ஜேவிபினர் தேர்தலில் வெற்றிப்பெற முனைகின்றனர். ஈழத்தமிழர்களுக்கு நட்பு நாடுகள் கிடையாது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 16 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri