இலங்கையின் கோவிட் மாறுபாடுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் - தரவுகள் விரைவில் அதிகாரிகளுக்கு
இலங்கையில் கோவிட்டின் புதிய மாறுபாடுகளுக்கு எதிராக, தற்போது பயன்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசிகளின் செயல்திறன் தொடர்பான தரவுகள் தொடர்புடைய அதிகாரிகளுக்கு விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அது தொடர்பான தரவுகள் சுமார் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கோவிட் வகைகளின் ஆராய்ச்சியை விரிவுபடுத்துமாறு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவை வலியுறுத்தியுள்ளது.
கோவிட்டின் புதிய மாறுபாடுகள் தொடர்பில், தற்போதைய தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து கரிசனை இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் நவீன் டி சொய்சா கூறியுள்ளார்.
தற்போதைய தடுப்பூசிகள், ஆரம்பத்தில் உருவான கோவிட் வைரஸிற்காக உருவாக்கப்பட்டவையாகும்.
எனவே, தற்போதைய மாறுபாடுகளுக்கு எதிராக, இந்த தடுப்பூசிகளின் செயல்திறனை அறிந்து கொள்ள, அறிவியல் மற்றும் பல பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆய்வு விடயத்தில், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தை மட்டும் சார்ந்து இருக்காமல், சுகாதார அமைச்சின் கீழ் சோதனை நடத்த வேண்டும் என்றும் நவீன் டி சொய்ஸா வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சின் கீழ் பல நிபுணர்கள் பணிபுரிகின்றனர், எனவே அவர்களின் நிபுணத்துவத்தை சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஹ்ரைனில் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சி, உலகெங்கிலும் புதிய (SARS-COV-2) சார்ஸ் - கோவிட்-2, வகைகளின் தோற்றம், ஆரம்பத்தில் சீனா - வுஹான் மாறுபாட்டிற்கு எதிராக வடிவமைக்கப்பட்ட, தற்போதைய தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றிய கவலையை எழுப்பியுள்ளது.
பஹ்ரைனில் நடத்தப்பட்ட ஆய்வில், எஸ்ட்ராசெனெகா (AZ/ Covishield), ஃபைசர்/ பயோண்டெக், சினோஃபார்ம் மற்றும் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் தொடர்பான மருத்துவமனையில் சேர்க்கும் அபாயத்தை குறைக்கிறது. எனினும் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கை மற்றும் இறப்புகளுடன் ஒப்பிடும்போது சினோஃபார்ம் தடுப்பூசி பெறுபவர்களிடையே கோவிட் தொற்றில் அதிக ஆபத்து இருப்பதைக் காட்டுகிறது.
இதற்கிடையில், தடுப்பூசிகளால் பாதுகாப்பு குறைந்து வருவதாக புதிய தரவு காண்பிப்பதால், அடுத்த மாதம் கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகளை விநியோகிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.
டெல்டா வகையின் ஆதிக்கத்துடன், தடுப்பூசியின் ஆரம்ப 2 அளவுக்கு பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது என்பது இப்போது மிகவும் தெளிவாகியுள்ளது என்று அமெரிக்காவில் உள்ள சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையும் ஆய்வு செய்து வருகிறது. எனினும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
