முல்லைத்தீவில் ஒரே நாளில் நால்வர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு - மக்களுக்கு கடும் எச்சரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே நாளில் நால்வர் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நால்வரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
முள்ளியவளையின் கணுக்கேணி கிழக்கு, தண்ணீரூற்று, கிச்சியாபுரம் மற்றும் ஒட்டுசுட்டானின் பெரிய சாளம்பன் ஆகிய கிராமங்களை சேர்ந்த 70, 47, 68 வயதுகளையுடைய ஆண்கள் மூவரும், 42 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றால் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கோவிட் மரணங்கள் சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
