யாழில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட கொவிட் கொத்தணி - இதுவரை 24 பேர் பாதிப்பு
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயில் வீடு ஒன்றில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 78 பேரில் 24 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் ஏனைய 54 பேர் நேற்றில் இருந்து மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
15 பேர் மாத்திரம் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட திருமணத்தில் சுமார் 100 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்.
பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் திருமணம் நடந்த வீட்டை சுற்றிவளைத்து அதில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 24 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் ஏனையவர்களின் தனிமைப்படுத்தல் நாட்களை மேலும் 14 நாட்களாக நீடிப்பதற்கு நேற்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.