நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் பலி
இலங்கைக்குள் மேலும் 6 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 667 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நேற்று ஒருநாளில் மாத்திரம் அதிகளவான கோவிட் தொற்றாளிகளாக 1531பேர் கண்டறியப்பட்டனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1531 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 106,484 ஆக உயர்வடைந்துள்ளது.