இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் பரவல்: அச்சத்தில் மக்கள்
இந்தியா முழுவதும் இதுவரை 23 பேருக்கு ‘ஜெ.என். 1’ வகை கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட்பரவல் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கோவிட் தொற்று
இது குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கோவிட் வைரஸிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 656 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam