நீதிமன்றில் வாசிக்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் பொய்யான ஆதாரங்களைக் காட்டியதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் வாசிக்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம், ராஜகிரியவில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதி அதில் பயணித்தவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தியதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அவரது அப்போதைய வாகன சாரதி திலும் துசித குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோர் சாட்சியங்களை பொய்யாக்கியமை மற்றும் மறைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான குற்றச்சாட்டுகளே இன்று நீதிமன்றில் வாசிக்கப்பட்டன.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam