கோவிட் தடுப்பூசி செலுத்த காத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு
இலங்கையில் கிடைக்கும் கோவிட் தடுப்பூசிகளின் இருப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி காலாவதியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது சினோபார்ம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக கோவிட் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
எனவே, யாராவது தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால், அவர்கள் அருகில் உள்ள மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் அதனை செலுத்திக்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் கோவிட் தடுப்பூசிகள் இல்லை

இதற்கிடையில்,தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பலர் தங்களுடைய சர்வதேச பயண தேவைகளுக்காக சுகாதார அதிகாரிகளிடம் தடுப்பூசி சான்றிதழ்களை கோரியுள்ளனர் எனினும் இலங்கையில் கோவிட் தடுப்பூசிகள் இல்லை என்று பொது சுகாதார பரிசோதகர் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார் .
இலங்கையில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கோவிட் தடுப்பூசிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு