323 கப்பல் கொள்கலன்களில் இருந்தது என்ன! இலங்கை சுங்கம் வழங்கியுள்ள விளக்கம்
சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 323 கப்பல் கொள்கலன்கள் தொடர்பில் வெளியான கூற்றுகளை இலங்கை சுங்கம் நிராகரித்ததுள்ளது.
இன்று நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருகொட இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 323 கப்பல் கொள்கலன்களில் ஆயுதங்கள்,போதைப்பொருள் அல்லது தங்கம் இருந்ததாகக் கூறப்படும் கூற்றுகளை இலங்கை சுங்கம் நிராகரிக்கின்றது.
தொழில்சார் பொருட்கள்
அத்துடன் இறக்குமதியாளர்களால் அறிவிக்கப்பட்ட தொழில்சார் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கு மட்டுமே சரக்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்பதையும் சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
அனைத்து துணை இறக்குமதி ஆவணங்களின் விரிவான சரிபார்ப்பிற்குப் பின்னரே கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.
மேலும், எந்தவொரு சட்டவிரோதப் பொருட்களோ அல்லது கடத்தல் பொருட்களோ இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.'' என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
